உருண்டைகள்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கும்
உருவமில்லாதொரு
உருண்டை உருள
கடற்கரையில்
நின்றிருந்தான் அவன்.

தொண்டைக்கும்
வயிற்றுக்கும்
உருண்டை உருள
"ஒரெயொரு சுண்டல் வாங்கிகோங்கண்ணே" என்றான் சிறுவன்.

0 மறுமொழிகள்: