நம் கதையில் ஒரு சம்பவம்.

பேருந்தில் நம் கிராமத்திற்கு சென்றோம்
அருகருகே அமர்ந்து.

அமர்ந்த சற்றுநேரத்தில்
தோள்மீது சாய்ந்து தூங்கிவிட்டாய்.

உன் தூக்கம் கலைக்க மனமில்லாமல்
அடுத்த கிராமத்தில் நீயாய் எழ
அன்புச்சண்டையுடன்
மீண்டும் ஊர் திரும்பியது
சரித்திரம்.

0 மறுமொழிகள்: