இலவசம்

லாரியோட்டும்
எங்கப்பன்
தந்தானய்யா
எங்கம்மாவுக்கும்
எனக்கும்
இலவசமாய்...
எய்ட்ஸ்.
.................................................................
நவம்பர் '06 - தேன்கூடு போட்டிக்காக.

காதல் நிலா

ஊடலில்...
மறைந்து...
தோன்றி...
மகிழ்வூட்டுகிறாயே
காதலே!!

முகிலிடம் விளையாடும்
நிலவைப் போலவே.

நண்பன்

நண்பன் தான்.

உணர்வால்...
உடலால்...
மெள்ள...
பிரிந்து...

பிரிந்து...

பிரிந்து போய்...

பகைவனானான்.

காதல் எதிரிகள்..

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

வாழ்வோம் வா

போதுமம்மா
நாம் காதலித்தது!
அதைக்
காதலர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வாழ்க்கை
நம்மை காதலிக்கிறதாம்..
வா..

வாழ்க்கையை
நாம்
காதலிப்போம்.

நீயும் நானும்

நீயும் நானும்

வேறு வேறாகவே
இருந்திருக்கலாம்...

நானும் நீயும்

காதலிக்காமல்
இருந்திருந்தால்.

பிரிவு

பிள்ளை பெற
தாய்வீடு செல்கிறாய்
நீ..
பிரிவின் வலியில் துடிக்கிறேன்
நான்.

வயது

நம் காதலின்
வயதைக் கேட்டார்கள்.

சொன்னேன்.

7 ஜென்மங்களென்று.

சாதி

விண்ணப்பத்தில் குறிப்பிடாததால்...
பள்ளியில் கேட்டார்களாம்
நம் பிள்ளையை...

"நீ எந்த மகரந்தத்தின் பூ?" - என்று!

நம் கதையில் ஒரு சம்பவம்.

பேருந்தில் நம் கிராமத்திற்கு சென்றோம்
அருகருகே அமர்ந்து.

அமர்ந்த சற்றுநேரத்தில்
தோள்மீது சாய்ந்து தூங்கிவிட்டாய்.

உன் தூக்கம் கலைக்க மனமில்லாமல்
அடுத்த கிராமத்தில் நீயாய் எழ
அன்புச்சண்டையுடன்
மீண்டும் ஊர் திரும்பியது
சரித்திரம்.

வாசம்!

பூக்கடைக்காரன் மனைவி:
"அத்தான், சாப்பிட வாங்க, மீன் கொழம்பு வெச்சிருக்கேன்".

அவன் சொன்னான்,

"இரும்மா, கையெல்லாம் பூநாத்தம்
சோப்பு போட்டு கழுவீட்டு வர்றேன்!"

பத்தவெச்சிட்டயே பரட்ட..

நம்பிக்கை

பயத்தைப்போக்க
நீ பற்றவைத்த
ஒற்றை பீடியில்
வைக்கும் நம்பிக்கையை
அதைத் தாங்கிக்கொண்டிருக்கும்
விரல்களின் மீது வைத்தால் என்ன?