கனவில் நீ

நேற்று
என் கனவில்
நீ வந்தாய்.
வாசற் கதவைத் திறந்து
"உள்ளே வா" என்றேன்
மகிழ்ச்சிப் பெருக்கோடு.
கனவில் கூட
என்னைக்
காணக்கூடாது என
எச்சரிக்கத்தான் வந்தேன்
என்று சொல்லி சென்றுவிட்டாய்.
கனவில் கூட
கல்நெஞ்சமடி உனக்கு

0 மறுமொழிகள்: