உதிரிபூக்கள்

நான் கொடுத்த
எல்லாக் கடிதங்களையும்
கிழித்தெரிந்தாய் நீ.
அத்தனையும்
உதிரிப்பூக்களாய்
உன் காலடியில்.

எனக்கு நிம்மதி.

இனி உன் கால்கள்
இந்த பூக்களின் மேல் அல்லவா
நடந்து செல்லும்.

4 மறுமொழிகள்:

sooryakumar said...

கவிதைகள் மிகமிக எளிமையாக இருக்கின்றன. இன்னும் இறுக்கியிருக்கலாம். நன்று.

கவிப்ரியன் said...

இறுக்கிப்பார்க்கிறேன்.
வருகை தந்தமைக்கு நன்றிகள் சூரியகுமார்.

ச.பிரேம்குமார் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

ச.பிரேம்குமார் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்