கோபம்

என் மேல்
தீராத கோபமென்றால்
என் இதயத்தை
உன்னிடம் தருகின்றேன்,
முற்களால்
குத்திப்பார்த்து
உன்
கோபம் தணித்துக்கொள்.

உன் மலர்க்கைகளில்
இரத்தக்கறை
படிந்துவிட்டால்...
என்னிடம் சொல்.
துடைத்துவிடுகிறேன்.

0 மறுமொழிகள்: