போதி மரம்

மனிதா!
இன்னும் நீ ஏன் உணரவில்லை
உனக்கு நீதான் போதி மரமென்று!

நீ சித்தார்த்தனாகவே இரு,
புத்தனாக வேண்டிய கட்டாயமில்லை.

நீ கௌசிகனாகவே இரு,
விசுவாமித்திரனாக வேண்டிய அவசியமில்லை.

நீ உன்னையிழந்து
செய்யும் செயல்களிலெல்லாம்..
உனக்கு நீயே போதி மரமாவாய்.

நீ சுயநலவாதியாய் இருப்பின்,
உனது அழிவே உனக்கு போதி மரம்.

நீ பேராசைக்காரனாய் இருப்பின்,
உனது இழப்பே உனக்கு போதி மரம்.

நீ கொள்ளையனாய் இருப்பின்,
உன் மன உறுத்தல்களே உனக்கு போதி மரம்.

நீ ஊதாரியாய் இருப்பின்,
உன் நோயே உனக்கு போதி மரம்.

ஆம்.

செய்யப்போகும் செயல்களுக்கு
நீ எஜமானி.

செய்த செயல்கள்
உனக்கு எஜமானி.

0 மறுமொழிகள்: