ஏய் செல்லம்..

"முடியாது" என்று மறுத்தாய்,
"மாட்டேன்" என்று அடம்பிடித்தாய்,
"வீட்டில் சொல்லி உன்னை மாட்டிவிடுகிறேன் பார்" என மிரட்டினாய்,
ஆனாலும் உன் சகோதரர்களை என் நண்பர்களாக்கினாய்,
பெற்றோரை அத்தை, மாமா என்று அழைக்க சொன்னாய்...
வீடு வரை... நீ வா... உன் காதல் வரக்கூடாதென்று கட்டளையிட்டாய்...
இன்னும் பல ஜாலங்கள் செய்தாய்...
ஆனாலும்
துரத்தித் துரத்தி என்னை காதலிக்கவைத்து... பின்
என்னை நீ கல்யாணம் கட்டிக்கொண்டாய்.

0 மறுமொழிகள்: