'கவி'

நான் வாங்கிய டைரிகளில்
உனது அத்துனை அசைவுகளும்
பதிவாகியிருக்கின்றன
கவிதைகளாய்.

என் மூளையில்
அத்துனை செல்களும்
நிரம்பியிருக்கின்றன
உன்னைப் பற்றிய
கவிதைகளாய்.

எனது அத்துனைப் பேனாக்களிலும்
நிரப்பியிருக்கிறேன்
மைக்கு பதில் கவிதைகளாய்.

ஆனால் எனது 'கவி'தையே..!!

நீ என்னோடு வருவாயா
என் வாழ்க்கையாய்..!

2 மறுமொழிகள்:

Mohan Madwachar said...

சும்மா நச்சுன்னு ஒரு கவிதை.

http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்று
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com

கவிப்ரியன் said...

நன்றிகள்