சலனம்

பெருங்கடலில் கூட
சிறு கல்லெறிந்தால்
சின்னச் சலனம்
தோன்றி மறையுமே!

என்
கடிதக்கற்கள்
உன் இதயக்கடலில்
சிறு சலனத்தைக்கூட
ஏற்படுத்தவில்லையா?

எனக்கு சாபமிட்டு பழக்கமில்லை.

உன் இதயம்
சஹாரா பாலைவனமாய்
இருப்பதைவிட
சலனமற்ற கடலாகவே இருக்கட்டும்.

0 மறுமொழிகள்: